பாடசாலை கழிவறையில் வைத்து 12 வயது மாணவி துஸ்பிரயோகம் : 55 வயதுடைய ஆசிரியர் கைது !

பாடசாலையில் 12 வயது மாணவியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய 55 வயதுடைய ஆசிரியர் ஒருவர் ஹல்துமுல்ல பொலிஸாரால் நேற்று (சனிக்கிழமை) கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த மாணவி பாடசாலையின் கழிவறையில் வைத்து துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஏனைய மாணவர்கள் இந்த ஆசிரியரால் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளார்களா என்பதை அறிய ஹல்துமுல்ல பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.